Thursday, May 21, 2009

பிரபாகரன் மரணம்:


Nakeeran Latest Biweekly edition photo:

ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.


மரணம் எழுப்பும் கேள்விகள்: இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...
இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.


இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.
பதுங்குக் குழி ஆதாரங்கள்: பிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.


சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் "இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...
இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.
பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?: பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.


அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.


போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?


ஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


மரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்: இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.


எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.
ஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.


இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.


முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்: இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.


அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.


இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை "ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.


இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.


கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?: ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.


இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.


உலகம் முழுவதும் தொடர்புகள்: மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.
இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.


இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்! - Thanks Dinamani articals.





Wednesday, May 13, 2009

தேர்தல் கணிப்புகள் - என் பார்வையில்

கூட்டணி முடிவுகள் :
அ.தி.மு.க. கூட்டணி 25 - 31
தி.மு.க. கூட்டணி 8 - 14
பா.ஜ.க. 0-1

தனிதனியே இடங்கள் :
தி.மு.க. 6-8
காங். 1-5
விடுதலை சிறுத்தை 1
அ.தி.மு.க.15-20
ம.தி.மு.க.2-3
பா.ம.க.5
இந்திய கம்யூனிஸ்டு 2
மார்க்சிஸ்ட் கம்யூ 1
பா.ஜ.க. 0-1


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர்கள்,

(1) வட சென்னை தா.பாண்டியன்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)
(2) மத்திய சென்னை தயாநிதி மாறன் -(தி.மு.க.)
(3) தென் சென்னை சிட்லபாக்கம் ராஜேந்திரன்-(அ.தி.மு.க.)
(4) திருவள்ளூர் (தனி) டாக்டர்வேணுகோபால்- (அ.தி.மு.க.)
(5) காஞ்சீபுரம் டாக்டர்இ.ராமகிருஷ்ணன்- (அ.தி.மு.க.) / விஸ்வநாதன் - (காங்)
(6) ஸ்ரீபெரும்புதூர் ஏ.கே.மூர்த்தி-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(7) அரக்கோணம் அரங்கவேலு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(8) வேலூர் எல்.கே.எம்.பி.வாசு- (அ.தி.மு.க.)
(9) கள்ளக்குறிச்சி கோ.தன்ராஜ்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(10) சேலம் செ.செம்மலை- (அ.தி.மு.க.)
(11) தர்மபுரி இரா.செந்தில்-பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(12) கிருஷ்ணகிரி கே.நஞ்ஜே கவுடு- (அ.தி.மு.க.)
(13) கோவை பி.ஆர்.நடராஜன்- (மார்க்சிஸ்ட் கம்யூ.)
(14) நீலகிரி (தனி) ஆ.ராசா-(தி.மு.க.) / டாக்டர் கிருஷ்ணன்- ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(15) திருப்பூர் திருப்பூர் சிவகாமி- (அ.தி.மு.க.)
(16) நாமக்கல் செ.காந்திசெல்வன்- (தி.மு.க.)
(17) பொள்ளாச்சி கே.சுகுமார்-(அ.தி.மு.க.)
(18) ஈரோடு கணேசமூர்த்தி-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(19) திருவண்ணாமலை ஜெ.குரு- பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(20) ஆரணி சுப்பிரமணி (அ.தி.மு.க.)
(21) சிதம்பரம் (தனி) தொல்.திருமாவளவன்- விடுதலை சிறுத்தை (தி.மு.க. கூட்டணி)
(22) கடலூர் எம்.சி.சம்பத்- (அ.தி.மு.க.)
(23) மயிலாடுதுறை மணிசங்கர் அய்யர்- காங். / ஓ.எஸ்.மணியன்- (அ.தி.மு.க.) (24) பெரம்பலூர் து.நெப்போலியன்- (தி.மு.க.)
(25) கரூர் கே.சி.பழனிச்சாமி- (தி.மு.க.) / மு.தம்பித்துரை- (அ.தி.மு.க.)
(26) தஞ்சை துரை.பாலகிருஷ்ணன்-ம.தி.மு.க. (அ.தி.மு.க. கூட்டணி)
(27) திருச்சி சாருபாலா தொண்டமான்- காங். / ப.குமார்- (அ.தி.மு.க.)
(28) விழுப்புரம் (தனி) எம்.ஆனந்தன்- (அ.தி.மு.க.)
(29) நாகை (தனி) ஏ.கே.எஸ்.விஜயன்- (தி.மு.க.)
(30) மதுரை மு.க.அழகிரி- (தி.மு.க.)
(31) சிவகங்கை ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்- (அ.தி.மு.க.)
(32) ராமநாதபுரம் வ.சத்தியமூர்த்தி- (அ.தி.மு.க.) / திருநாவுக்கரசர்- (பா.ஜ.க.)
(33) விருதுநகர் வைகோ- (ம.தி.மு.க.)
(34) தேனி ஆரூண்- காங். / தங்கதமிழ்ச்செல்வன்- (அ.தி.மு.க.)
(35) திண்டுக்கல் பி.பாலசுப்பிரமணி- (அ.தி.மு.க.)
(36) நெல்லை ராமசுப்பு-காங். கே.அண்ணாமலை- (அ.தி.மு.க.)
(37) தென்காசி பொ.லிங்கம்- இந்திய கம்யூனிஸ்டு (அ.தி.மு.க. கூட்டணி)
(38) தூத்துக்குடி டாக்டர் சிந்தியா பாண்டியன்- (அ.தி.மு.க.)
(39) கன்னியாகுமரி ஜெ.ஹெலன் டேவிட்சன்- (தி.மு.க.)
(40) புதுச்சேரி நாராயணசாமி- காங்.

Sunday, May 3, 2009

நில் , கவனி, வாக்களி!

நினைவுகள் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தாவுகின்றன. அப்போதெல்லாம் "மர்பி" ரேடியோவின் முன்னால் கூட்டம் கூட்டமாக அமர்ந்து வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைக் கேட்டபடி அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறு நாள் செய்தித் தாளில் பார்த்தோ, அல்லது ஆறரை மணி ஏழே கால் மணி வானொலி செய்திகளில் கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. இன்றைய தேர்தல் பரபரப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அப்போதைய தேர்தல் முறைகளும், தகவல் பரிமாற்றங்களும் எத்தனை பின்னோக்கியிருந்தது என்பதை சிலிர்ப்புடன் உணர முடிகிறது.
இன்றைய தேர்தல் அப்படியில்லை. ஆறு மணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், கொஞ்சம் நாகரீகமாகச் சொல்வதென்றால், ஆறுமணிக்கு ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் அது முதன்மைச் செய்தியாகிவிடுகிறது. வீசப்பட்ட செருப்புக்கு ஒரு விளம்பரம் தேசிய அளவில் கிடைத்தும் விடுகிறது. விட்டால், இந்த செருப்பு வீசும் நிகழ்ச்சியை உங்களுக்காத் தொகுத்து வழங்குவது "முனியாண்டி செருப்பு கம்பெனி" என ஸ்பான்சர்ஸ் கூட கிடைப்பார்கள்.
ஊடகத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பயனாக, ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதை கிட்டத் தட்ட அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்தி வருகின்றனர். சுவரில் போஸ்டர் ஒட்டுவது தேவையற்றுப் போய்விட்டது, எல்லார் வீட்டு வரவேற்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஒட்டி வைக்கப்பட்ட பின். மக்களின் நாடித் துடிப்பை அரசியல் கட்சிகள் கணிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப நாள் தோறும் பல்டியடிக்கப் பழகவும் இந்த ஊடக வளர்ச்சி பெரும் துணை செய்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் வரை எட்டாவது பக்கத்தின் கடைசியில் இடம் பெற்ற "இலங்கையில் யுத்தம்" எனும் செய்தி இன்று எல்லா பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் ஈழமாகவும், ஈரமாகவும் இடம்பெறக் காரணமும் இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.
தேர்தல் முடிந்த மூன்றாவது நாளே ஈழமாவது. சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுப்போம் என தலைவர்கள் கழன்று கொள்ளப் போவது மட்டும் அக்மார்க் உண்மை.
இப்போதைக்கு தமிழனின் உயிர் அவர்களுக்கு துருப்புச் சீட்டு. ஈழம் என்று கூட சொல்லக் கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தவர்கள் கூட தனி ஈழம் என தாவியதற்கு 40-ஐத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை அரசியல் கைக்குழந்தைகளும் அறியும்.
"அழுத்தமாய் சொன்னால்" போர் நிற்கும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கறியும்.
இலங்கைக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால், இலங்கையில் சீனாவின் தளம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தாகிப் போகும் எனும் பதற்றம் இந்திய ராணுவத்திடம் இருப்பதும் கவனிக்கத்தக்கது.உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதில் பேர் போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் எனும் தலையாய கவலை அரசியல் கட்சிகளுக்கு. "போர் நிறுத்தம் கொண்டு வா..." எனக் கதறும் அரசியல் கட்சிகள், ஒரு வேளை போர் நிறுத்தம் வந்து விட்டால் உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்து, "அய்யோ ஓட்டு போய்விட்டதே..." என கதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீ ஒன்று சொன்னால், நான் இன்னொன்று சொல்வேன் என மாறிமாறி தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் உடுக்கையடிப் பிரசாரம் நிகழ்த்துவதில் குழம்பிப் போய் இருப்பவர்கள் பொது மக்கள் மட்டுமே.
காலையில் ஒரு கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம், மாலையில் மாறிவிடுகிறது. இரண்டு பேருமே அப்படித் தான் என மூன்றாவது நபருக்கு ஓட்டு போடலாமா என யோசிக்கும் மக்களைப் பரவலாக எங்கும் காண முடிகிறது. ஊடகங்களும், இணையமும் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய சூழலில் ஒரு பொதுப்படையான கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை எனும் நிலையே காணப்படுகிறது.
வெறும் மேடைப்பேச்சுகளை மட்டும் வைத்து எந்த அரசியல் வாதியையும் கணிக்க முடியாது. கணிக்கக் கூடாது. அது ஏசி அறையில் இருந்து கொண்டு சென்னையே குளிர்கிறது என்று கணிப்பதற்கு சமம்.
ஒரு தலைவர் வாக்குறுதிச் சுருக்குப் பையைத் திறந்து அள்ளி விடுகிறார் எனில் கொஞ்சம் கவனியுங்கள். சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே எழுப்புங்கள்.
இந்த தலைவருக்கு இந்தப் பிரச்னையில் கடந்த மாதம் இருந்த நிலைப்பாடு என்ன? கடந்த வருடம் இருந்த நிலைப்பாடு என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைப்பாடு என்ன? தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டிருந்தார் எனில், அந்த சிக்கலில் முடிந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்ச நம்பிக்கைக்கு உரியது என கருதிக் கொள்ளலாம்.
இரண்டாவது, அந்தப் பிரச்னை சம்பந்தமாக நபர் தந்திருக்கும் வாக்குறுதி நிறைவேற சாத்தியக் கூறுகள் என்னென்ன? அந்தத் தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க சாத்தியம் உண்டா? அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சியின் தலைமை, உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த கொள்கையோடு சற்றேனும் உடன்பாடு உடையவர்கள் தானா? என சில கேள்விகளை எழுப்புங்கள்.
மூன்றாவதாக, எல்லோமே சரியாய் இருந்தால் சர்வதேச அளவில் இந்த திட்டத்தை அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியுமா என யோசியுங்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தெந்த நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்பன போன்றவற்றை ஆராய்தல் மிக முக்கியம்.
நான்காவதாக, இது ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை? அதற்கு எழுந்த முட்டுக் கட்டைகள் என்ன? அந்த முட்டுக் கட்டைகள் வரும் ஆட்சியில் வருவதற்கான வாய்ப்புகள் என்ன? என்பதை கவனியுங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக கண்மூடித் தனமாக ஒருவர் தரும் வாக்குறுதியை நோக்கி கேள்விகளை எழுப்புங்கள். "இதை நிறைவேற்ற நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை தெளிவாக்குங்கள்" என விசாரியுங்கள்.
நிலவில் நிலம் வாங்கித் தருவேன் என்றவுடன், மொட்டை மாடியில் படுத்துக் கிடந்து நிலவைப் பார்த்துக் கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலில் ஆளுக்கு நான்கு நட்சத்திரம் என்ற வாக்குறுதி வந்து சேரும்.
இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு, நட்புறவு, சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முடிவெடுங்கள்.
கடைசியாக ஒன்று, குப்பைத் திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்துடன் மூன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முறை குடும்பத்தினரோடு மூன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாராய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்.
முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் மட்டுமே!
திணிக்கப்பட்ட அபிப்பிராயங்களை வெளியேற்றுங்கள்... வாக்களியுங்கள்... இந்தியா செழிக்க வாய்ப்பளியுங்கள்!
- Youthful vikatan lirunthu