அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி,
ஒரு வேட்பாளர் குற்றைந்தது இருபது வாகனம் வரை வைத்து இருக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி உண்டு, தொகுதிக்கு குறைத்தது 5 வேட்பாளர்கள் 543 தொகுதிகளில் 30 நாள் பிரச்சாரம் செய்யும்போது குறைத்தது 50 லிட்டர் பெட்ரோல் ஒரு நாளைக்கு போட வேண்டும் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 8,14,50,000 லிட்டர் பெட்ரோல் தேவை. ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் எனில் மொத்தம் 407 கோடி ரூபாய் இதற்க்கு மட்டுமே செலவு ஆகிறது. இது ஒரு அனுமானிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. நிஜமாக 800 கோடிக்கும் அதிகமாக செலவு செய்வார்கள்.
செலவை விடுங்கள், அவர்கள் சம்பாரித்த கருப்பு பணம் செலவு செய்கிறார்கள், ஆனால் இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸ்யிடு பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது.
Euro-3 Standard படி ஒரு கார் 150g/km CO2 குறைத்து வெளிஇட்டால் மொத்தம் 1,22,17,50,000 ton CO2 இந்த பூமி வாயு மடலத்தில் கலக்க பூக்கிறது இன்னும் ஒரு மாதத்தில். இந்த லட்சணத்தில் நமது அரசின் "Go Green" பிரச்சாரம் வேறு. ஒரு நாள் கூட மக்கள் pirachanigalai பற்றி பேசாத MP தேர்தெடுக்க நாம் இன்னும் ஒரு மோசமான உலகை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இது இல்லாமல் இப்போது நமது பெரிய அரசியல் தலைவர்கள் அனைவரும் Helicopter பயன் படுத்தும் அளவுக்கு பணக்காரர்கள் ஆகி விட்டார்கள்.
தேர்தல் நேரத்தில் ஊழல், வன்முறை ஆகியவை தலையெடுத்துவிடக் கூடாது என்று விழிப்போடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்கு உரியதுதான். ஜனநாயகம் மாசு படாமல் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு நம்முடைய சுற்றுச்சூழல் மாசு படாமல் காக்கவேண்டியதும் அவசியம். இதை namathu தேர்தல் ஆணையமும், நம்முடைய அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்வார்களா?
இங்கே சிந்திப்பதற்கு நமக்கு ஏதும் நேரம் இருந்தால் சற்று சிந்தியுங்கள் நண்பர்களே.
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment