Thursday, April 2, 2009

''கூட்டணி பேச்சு முறிந்தது!'' (ஒரு கற்பனை பேட்டி...)

ஜூனியர் விகடன் ஒரு கற்பனை கலந்துரையாடல் :

சரத்குமார் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தொகுதிப் பங்கீட்டுக்காக நடத்திய பேச்சுவார்த்தை...
இல.கணேசன்: வாங்க, வாங்க... சரத்! என்ன தனியா வந்திருக்கீங்க? கூட கட்சி நிர்வாகிகள் வரலையா?
சரத்: ராதிகாதானே..? 'அரசி' ஷ¨ட்டிங் போயிருக்காங்க.
இல.கணேசன்: எங்க கட்சியில தொகுதிப் பங்கீட்டு விஷயமாப் பேச இருவர் கமிட்டி ஒண்ணை அமைச்சுருக்கோம். அதுல நானும் திருநாவுக்கரசரும் இருக்கோம்.
சரத் (மனசுக்குள்): எங்க கட்சியில இருக்குற ரெண்டு பேரும்தான் உங்களோட அடுத்தடுத்த கட்டமா பேசுவோம். அதுசரி... திருநாவுக்கரசர் எங்கேங்க..?இல.கணேசன்: அவரு வேற ஏதும் கட்சிகூடப் பேச முடியுமானு பார்க்கப் போயிருக்கார்!
சரத்: சரி, நேரா மேட்டருக்கு வருவோம்...
இல.கணேசன்: இருக்கிறது 40 தொகுதி. இதை எப்படி பிரிச்சுக்கறது?
சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துடுங்க. மீதி 38-ம் உங்க கட்சிக்கு!இல.கணேசன்: அய்... அய்! எங்களுக்கு 2 போதும். 38-ல் நீங்கதான் நிக்கணும்!
சரத்: அதெல்லாம் முடியாதுங்க. நீங்க பாட்டுக்கு ஸீட்டைக் கொடுத்துட்டுப் போயிடுவீங்க. அங்கே நிறுத்தறதுக்கு நாங்க எங்கே போய் ஆளைத் தேடுறது?இல.கணேசன்: (மெதுவாக) கரெக்டா, நாம் பேச வேண்டிய டயலாக்கை இவரு பேசறாரே... (உரக்க) அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ரெண்டு. மீதியெல்லாம் உங்களுக்குத்தான்!
சரத் (டென்ஷனாக): 'கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதிப் பங்கீட்டினால் முறிந்தது'னு பத்திரிகைக்காரங்களுக்குச் சொல்லிடுங்க. எங்களுக்குனு சுயமரியாதை இருக்குல்ல... யார் நாங்க எதிர்பார்க்கிற ஸீட் தர்றாங்களோ அவங்களோடதான் கூட்டணி! நான் வர்றேங்க!

No comments:

Post a Comment